காந்தி ஜெயந்திக்கு மறுநாள் காலை. காலையில்
வழக்கமான தேநீர் கடைக்குச் சென்றேன். சமீபத்தில் கடைமுன் நான் ஒரு
நண்பரிடம் வாதித்ததைக் கண்ட கடைக்காரர் ‘சினிமாவில் இருக்கிறேன்’ என்பதை
கண்டு பிடித்துவிட்டிருக்கிறார் போல. தேநீர் தரும்போது தனது சென்னை வட்டார
மொழியில், “நேத்து டீவீல காந்தி படம் போட்டான், பாத்தீங்களா? பாட்டு இல்ல,
ஃபைட்டு இல்ல, ஒரு செக்ஸ் இல்ல, தத்ரூபமா எடுத்திருக்கான். நல்ல படம்!”
என்றார்.
0 comments